திருக்கோவிலூர் அருகே லாரி மோதி விவசாயிகள் 2 பேர் பலி
திருக்கோவிலூர், நவ.7: திருக்கோவிலூர் அருகே வேலாகுளம் என்ற பகுதியில் இருந்து திருக்கோவிலூர் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், கம்பு முதலியவற்றை ஏற்றி வந்த விவசாயிகள் இருவர் லாரி மோ
திருக்கோவிலூர், நவ.7: திருக்கோவிலூர் அருகே வேலாகுளம் என்ற பகுதியில் இருந்து திருக்கோவிலூர் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல், கம்பு முதலியவற்றை ஏற்றி வந்த விவசாயிகள் இருவர் லாரி மோதி பலியாகினர்.
மாட்டுவண்டியில் சமயன், ரங்கநாதன், வீரக்கண்ணு ஆகிய மூவரும் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சமயன், ரங்கநாதன் இருவரும் பலியாகினர். இருவரும் மாமனார்-மருமகன் உறவுமுறை என்பதால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.