முகப்பு
தற்போதைய செய்திகள்

கும்பக்கரை, சோத்துப்பாறையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!

சென்னை, ஏப்.16:  கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய இடங்களில், தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் இன்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:09 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:24 PM

சென்னை, ஏப்.16:  கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய இடங்களில், தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, மன்ற உறுப்பினர் லாசர் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய சுற்றுலா இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே, அந்த இடங்கள் அரசு சுற்றுலா மையங்களாக அறிவிக்கப்படுமா? என்று லாசர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

அதற்கு பதிலளித்த அமைச்சர் கோகுல இந்திரா, கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதைக் கருத்தில் கொண்டு அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்து அங்கே சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.