பவானியில் புதிய அணை : கண்டித்து கொங்கு இளைஞர் பேரவை நடைப்பயணம்
கோவை, ஆக., 11 : பவானி அணைக்கு குறுக்கே கேரளாவில் புதிய அணை கட்டி, தமிழக எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து கோவையில் இருந்து கே
கோவை, ஆக., 11 : பவானி அணைக்கு குறுக்கே கேரளாவில் புதிய அணை கட்டி, தமிழக எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற கேரள அரசின் திட்டத்தைக் கண்டித்து கோவையில் இருந்து கேரள மாநிலம் அட்டப்பாடியை நோக்கி நடைபயணம் செய்ய முயன்ற கொங்கு இளைஞர் பேரவையினர் 25 பெண்கள் உட்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
அட்டப்பாடியில் புதிய அணை கட்ட முயலும் கேரளாவின் திட்டத்தைக் கண்டித்து கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் குமார ரவிக்குமார் தலைமையில் இந்த நடைப்பயணம் துவங்கியது.