கிரானைட் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு: வழக்கு ஒத்திவைப்பு
மேலூர், ஆக., 13 : மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்தப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை செவ்வாய்
மேலூர், ஆக., 13 : மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்கள் கடத்தப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும், தற்போது பிஆர்பி நிறுவன அதிபரின் ஜாமீன் மனு மீதும், அமைச்சர் கோகுல் இந்திராவின் கணவர், திருப்பத்தூர் அருகே பாசன குளத்தை ஆக்ரமித்து அதில் செங்கல்காலவாசல், சேம்பர் பிரிட்ஜ் நடத்தி வருவதாகவும், அங்குள்ள ஆகரமிப்பை காலி செய்வதற்காக தொடரப்பட்ட வழக்கும் இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.