கிரானைட் குவாரி வழக்கு: முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
மேலூர், ஆக.14: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடந்த சில நாட்களாக கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் உள்பட அனைவரின் முன் ஜாமீன் மனு
மேலூர், ஆக.14: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடந்த சில நாட்களாக கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் உள்பட அனைவரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு தள்ளிவைத்தார் நீதிபதி.
அனைவரின் முன் ஜாமீன் மனுவையும் ஒரே சேர விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.