சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சாத்தூர், ஆக., 14 : சாத்தூரில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், சாத்தூர் பகுயில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும் திமுக ஆட்சியில் 650 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்
சாத்தூர், ஆக., 14 : சாத்தூரில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், சாத்தூர் பகுயில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும் திமுக ஆட்சியில் 650 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதை விரைவாக செயல்படுத்தக் கோரியும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், திருச்சுழி தொகுதி எம்எல்ஏ தங்கம் தென்னரசு தலைமையில் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
250க்கும் மேற்பட்ட திமுக நகர ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் சாத்தூரில் இருந்து கலந்து கொண்ட திமுகவினரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.