முகப்பு
தற்போதைய செய்திகள்

கிரானைட் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் ஆக.31க்கு ஒத்திவைப்பு

மதுரை, ஆக.22: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி 4 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள் ஜனா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:36 PM
பகிர்:

மதுரை, ஆக.22: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி 4 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை இன்று எடுத்துக் கொண்ட மதுரை நீதிமன்ற நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா, துரைசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மதுரை

எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் தகவல் கேட்டனர். அதற்கு, அவர், இந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் இது வரை, 35 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகிறோம். முறைகேடு புகாருக்கு உள்ளாகி, சரண் அடைந்துள்ள பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல் தெரிவித்தார்.

பின்னர் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் பேரிலும், வரும் ஆக.31ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →