சிதம்பரத்தில் கடை அடைப்பு: வெறிச்சோடிய நகரம்
கர்நாடக அரசைக் கண்டித்து நடக்கும் முழு அடைப்பு காரணமாக சிதம்பரத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கர்நாடக அரசைக் கண்டித்து நடக்கும் முழு அடைப்பு காரணமாக சிதம்பரத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காவிரி டெல்டா கடை மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் தமிழக விவசாயிகள் சங்கம், அனைத்து கட்சிகள் மற்றும் வர்த்தகர் சங்கம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை முழுக் கடை அடைப்பை நடத்துகிறது.
இதனால் சிதம்பரம் நகரில் 4 வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டிருந்தன. மேலரதவீதியில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிக்கை கடைகள், நகைக்கடைகள், பெரியமார்க்கெட், சின்னமார்க்கெட், மீ்ன்மார்க்கெட், ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் நகரம் வெறிச்சோடி கிடந்தது. அண்ணாமலைநகர் பகுதியில் வர்த்தகர் சங்கத்தினர் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி கடைகளை திறந்து வைத்திருந்தனர்.
Advertisement