ஈரோடு : புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து பெண்கள் மனு
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சென்னிமலை அருகே உள்ள வெப்பெலி கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், சென்னிமலை அருகே உள்ள வெப்பெலி கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
சென்னிமலை அருகே உள்ள வெப்பேலி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அனைவரும் விவசாயக் கூலி வேலைகள் செய்கின்றனர். இந்த நிலையில், அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறந்தால் திருட்டு அதிகமாகும். ஆண்கள் குடிக்கு அடிமையாகி குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அப்பகுதியில் புதிதாகத் திறக்க திட்டமிடப்பட்டுள்ள டாஸ்மாக் கடையைக் திறக்கக் கூடாது என்று சுமார் 60 பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.