பொள்ளாச்சியில் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற மாணவி பலி
பொள்ளாச்சியில் சைக்கிளில் பள்ளி சென்ற மாணவி, அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.
பொள்ளாச்சியில் சைக்கிளில் பள்ளி சென்ற மாணவி, அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சரண்யாதேவி. அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது, பாதையில் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் வந்த 3ம் எண் நகரப் பேருந்தின் பின் சக்கரம் ஏறி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.