குளித்தலை அருகே அடகுக் கடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகை கொள்ளை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அடகுக் கடையில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பஞ்சப்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அடகுக் கடையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது.
பஞ்சப்பட்டியில் நகை அடகுக் கடை வைத்துள்ள அரங்கசாமி என்பவர் வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது குடும்பத்தார் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த நகைகளையும், வீட்டுக்கு அடுத்து இருந்த அடகுக் கடையைத் திறக்கச் சொல்லி மிரட்டி, கடையில் இருந்த நகைகளையும் கொள்ளை அடித்துச் சென்றது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றார் அரங்கசாமி. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.