பல்லடம் அருகே உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பல்லடம் அருகே சுல்தான்பேட்டையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சுல்தான்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சசிகலா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் கூறி, தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.