முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலத்தில் கொலை வழக்குக் குற்றவாளிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில், கொலை வழக்கு ஒன்றில், 9 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்

சேலத்தில் கொலை வழக்குக் குற்றவாளிகள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில், கொலை வழக்கு ஒன்றில், 9 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

சேலத்தில், கொலை வழக்கு ஒன்றில், 9 குற்றவாளிகளுக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் முனுசாமி (48), தனியாருக்கு சொந்தமான மால்கோ நிறுவனத்தில் பணிக்கு வேலையாட்களை அனுப்பும் ஒப்பந்ததாராக இருந்தார்.

ஆட்களை தேர்வு செய்வதில் அதேப் பகுதியைச் சேர்ந்த கோபாலக் கண்ணன் என்பவருக்கும் முனுசாமிக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. கோபாலக் கண்ணன் சொன்ன ஆட்களைத் தேர்வு செய்யாததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும்.

இந்த நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி கோபாலக் கிருஷ்ணன், சில ஆட்களுடன் சேர்ந்து முனுசாமியை கொலை செய்தார். இந்த வழக்கில் கோபாலக் கண்ணன் உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. வழக்கு விசாரணை  மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம்,  குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், மேட்டூரைச் சேர்ந்த ரௌடி அன்புச்செல்வன்(40), கோபால கண்ணன் (32), பச்சியப்பன் (35), செந்தில்குமார் (29), அர்ஜூனன் (25), அறிவழகன் (27) முருகன் (26), மகேந்திரன் (24), மயில்சாமி (34) ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.24,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  2 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 2 நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →