முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே விவசாயி தற்கொலை

காட்டுமன்னார்கோயில் அருகே வவ்வாத்தோப்பைச் சேர்ந்த வைத்தியநாதசாமி (71). இவருக்கு 3 மகன்கள். விவசாயி வைத்தியநாதசாமிக்கு வவ்வாத்தோப்பு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே விவசாயி ஒருவர் வயலில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காட்டுமன்னார்கோயில் அருகே வவ்வாத்தோப்பைச் சேர்ந்த வைத்தியநாதசாமி (71). இவருக்கு 3 மகன்கள். விவசாயி வைத்தியநாதசாமிக்கு வவ்வாத்தோப்பு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது கடனை வாங்கி 6 ஏக்கரில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். தினமும் வயலுக்கு சென்று பயிரை கவனித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வயலுக்கு சென்று பயிரை பார்த்துள்ளார். பயிர் பூத்துபால்விடும் தருவாயில் நீரின்றி காயந்து வருவதை கண்டு மனமுடைந்தார். உடனே வயலிலேயே பூச்சிமருந்தை குடித்தும், காதில் ஊற்றிக்கொண்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அருகாமையில் வயலில் இருந்தவர்கள் வைத்தியநாதசாமியை காட்டுமன்னார்கோயில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் வைத்தியநாதசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.