வீட்டை எழுதித் தர மறுத்த பாட்டியைக் கொன்ற பேரன் கைது
மேலூர், ஜூன் 9: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரது பேரன் கண்ணன் (வயது 30). இவர் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கும் லோடு மேனாக வேலை செய்கிறார். இவரது தந்தை வழிப் பாட்டியின் வீட்டை தனக்கு எழுதித் த
மேலூர், ஜூன் 9: மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கம். இவரது பேரன் கண்ணன் (வயது 30). இவர் லாரியில் சரக்கு ஏற்றி இறக்கும் லோடு மேனாக வேலை செய்கிறார். இவரது தந்தை வழிப் பாட்டியின் வீட்டை தனக்கு எழுதித் தருமாறு நேற்று இரவு பாட்டியிடம் கேட்டுள்ளார். அவர் உனக்கு எழுதித் தர முடியாது என மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, அருகில் இருந்த கல்லை எடுத்து பாட்டியின் கழுத்தில் தாக்கியுள்ளார் பேரன். இதில், பலத்த காயமடைந்த பாட்டி கீழே விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீஸார் இன்று காலை கண்ணனைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.