சாத்தூர் அருகே கிணற்றில் விழுந்து மாணவர் பலி
சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார். சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:20 PM
சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார்.
சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். இதில் 4 பேருமே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களைக் காக்க விரைந்தனர். இந்த 4 பேரில் 3 பேரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். மாரிச்செல்வம் மட்டும் உயிரிழந்தார். இது குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.