சாத்தூர் ஓட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து : 3 பேர் பலி
சாத்தூர், மே, 4 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்கியச் சாலையில் இயங்கி வந்த மீனாட்சி பவன் என்ற ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் ப
சாத்தூர், மே, 4 : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்கியச் சாலையில் இயங்கி வந்த மீனாட்சி பவன் என்ற ஹோட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 3பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புப் படையினர் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஹோட்டலில் இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை, சாத்தூர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி, வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி நடந்து வருகிறது.
Advertisement