ஈரோடு அருகே 32 சவரன் நகைக் கொள்ளை
ஈரோடு, மே, 19 : ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த யசோதா (40) ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது தோழிகள் 3 பேரு
ஈரோடு, மே, 19 : ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த யசோதா (40) ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது தோழிகள் 3 பேரும் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மர்ம நபர்கள், மற்றொரு அறையிள் இருந்த பீரோவில் இருந்து 32 சவரன் நகை மற்றும் 6 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.