நாமக்கல், மே 28: நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூர் என்னும் இடத்தில் நேற்று இரவு 5 வீடுகளில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடுகளில் இருந்து சுமார் 20 பவுன் நகை மற்றும் ரொக்கம் திருடப் பட்டுள்ளது. திருடு போன பணம் மற்றும் பொருள்கள் குறித்து போலீஸார் மதிப்பிட்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீஸார் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.