பரமக்குடியில் 3 பேர் படுகொலை: நடவடிக்கை கோரி சாத்தூரில் ஆர்ப்பாட்டம்
பரமக்குடி அருகே தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி அருகே தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று காலை ஏழாயிரம் பண்ணையில் ஒரு பிரிவைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதிக்கு பேரணியாகச் சென்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த பேரணி காரணமாக ஏழாயிரம் பண்ணையில் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏழாயிரம் பண்ணையில் சிவசங்குப்பட்டி, பாண்டியாபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement