டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் பலி: மேலூரில் மக்கள் சாலைமறியல்
மதுரை மாவட்டம் மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு வேலுமணி என்ற இளைஞர் உள்பட 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் டெங்கு காய்ச்சலுக்கு வேலுமணி என்ற இளைஞர் உள்பட 5 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதில், வேலுமணி எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் இதனால் பெரிதும் துயரமடைந்தனர். ஆத்திரமடைந்த அவர்கள், அரசு டெங்கு தடுப்புக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலூர் நத்தம் சாலையில் தென்னகரம்பட்டியில் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்களை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானப் படுத்தினர். பின்னர் மறியல் கைவிடப்பட்டது.