முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் லாரிகளை சிறைப்பிடித்து சாத்தூர் அருகே பொதுமக்கள் சாலைமறியல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல்

Updated On : 22 நவம்பர், 2012 at 10:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:09 AM

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக மணல் லாரிகளை சிறைப்பிடித்து காலிகுடங்குடன் அமர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பந்துவார்பட்டி - சாத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சாத்தூர் தாசில்தார் மைக்கேல்ராஜ், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் நீர் வளம் பாதிக்கப்படுவதாகவும், வாழ்வாதாரம் கெடுவதாகவும் மக்கள் புகார் கூறினர்.

கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள கோபாலபுரம் மக்களும் காலி குடங்களுடன் அண்மையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.