டெங்கு பாதிப்பு: நாகை மருத்துவமனையில் மருத்துவக் குழு ஆய்வு
நாகை அரசு பொது மருத்துவமனையில், மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 4 பேர் கொண்ட குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.
நாகை அரசு பொது மருத்துவமனையில், மத்திய மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. 4 பேர் கொண்ட குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.
முன்னதாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், நாகை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தொடர்ந்து டெங்கு பாதிப்புக்குள்ளான குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.