முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே முன்னாள் பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது

ஈரோடு அருகே ரத்தினம்மா என்ற பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

ஈரோடு அருகே ரத்தினம்மா என்ற பெண் கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 3 முறை கவுன்சிலராக இருந்தவர் ரத்தினம்மா (55). இவருக்கு ஈரோடு

பழையபாளையம் பகுதியில் செங்கோடம்பள்ளத்தில் ஹாலோபிளாக் விற்பனை செய்யும் கடை உள்ளது. கடந்த 

பிப்.14ம் தேதி  ரத்தினம்மா கடையில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கழுத்தை அறுத்து தாலிக்கொடியைப் பறித்து, பணத்தையும் எடுத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக ஈரோடை சேர்ந்த பிரபாகரன் (22) மணிகண்டன் (24) ரமேஷ்குமார் (25) கணேசன் (23) ஆகிய நான்குபேரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.