நாகை.யில் கரை ஒதுங்கிய மர்மப் படகு! போலீஸார் விசாரணை
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் கடற்கரைப் பகுதியில் மர்ம படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இந்தப் படகு நாகை பகுதியில்
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் கடற்கரைப் பகுதியில் மர்ம படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இந்தப் படகு நாகை பகுதியில் இருந்து முன்னர் வெளியாருக்கு விற்கப்பட்டதாம். அந்தப் படகில் சிகரெட், துணிமணிகள், பெட்டிகள் ஆகியவை இருந்தன. ஆனால் இந்த விசைப்படகில் வேறு யாரும் இல்லை. எனவே, இது இங்கிருந்து வெளி நாட்டுக்கு ஆட்களைக் கொண்டு செல்ல பயன்பட்டதா அல்லது, வெளி நபர்கள் யாரேனும் நாகை கடற்கரைப் பகுதிக்கு ஊடுருவியிருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நாகை கடற்கரைப் பகுதியில் மர்மப் படகு கரை ஒதுங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.