சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டிகள் கொள்ளை
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம் ரொக்கம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம் ரொக்கம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இக்கடையின் விற்பனையாளராக சண்முகம் என்பவர் உள்ளார். திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடைந்ததை பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.65 ஆயிரம் ரொக்கம் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள மதுபானப் பாட்டில்களும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement