ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலர் கணவர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலர் கணவர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் காவலரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது அணியில் காவலராக பணிபுரிந்து வருபவர் உமாலட்சுமி. இவருக்கும் மதுரை, முரட்டன்பத்திலி, புதுஜெயில் ரோடு பகுதியில் குடியிருந்து வரும் குருசாமி மகன் செந்தில்பாண்டியன் (27) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தனிக்குடித்தனமாக மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளனர். செந்தில்பாண்டியன் இப் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.
மேலும் செந்தில்பாண்டியன் தனது ஊதியத்தில் இருந்து தனது தந்தைக்கு மாதம் ரூ.1500 கொடுத்து வந்துள்ளார். இதற்கும் உமாலட்சுமி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனம் உடைந்த செந்தில்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விஷம் குடித்துள்ளார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாண்டியன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இவரது தந்தை குருசாமி, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.