மடிக்கணினி வழங்கவில்லையாம்: கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வெள்ளிக்கிழமை மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியான சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோ கல்லூரியில் 750 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.