லாரி வாடகை உயர்வு: ஸ்ரீவிலி. வியாபாரிகள் கண்டனம்
டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, லாரி வாடகையை பல மடங்கு அதன் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, லாரி வாடகையை பல மடங்கு அதன் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் கோமதிசங்கர் ஜி.குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு வரும் லாரிகள் தங்களது வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்து பொது மக்களை நேரிடையாக பாதித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் பல மடங்கு உயர்தியுள்ள வாடகையை உடனை ரத்து செய்ய வேண்டும். மேலும் நியாயமான முறையில் வாடகையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதற்கான தீர்மானம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.