அம்பை அருகே குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் திங்கள்கிழமை குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் திங்கள்கிழமை குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பாசமுத்திரம் ஒன்றியம், வெள்ளங்குளி ஊராட்சியில் 7 வது வார்டுக்கு உட்பட்ட யாதவர் தெரு, பஜனை மடம் தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் இல்லையாம். ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்சாமி, ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் ஆர்.எஸ். நல்லசிவன், ஊராட்சித் தலைவர் சிவகாமி, துணைத் தலைவர் வி. கங்காதரன், கிராம நிர்வாக அலுவலர் பியூலாதேவி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆனையப்பன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்களை கலைந்து சென்றனர்.