மோசமான வானிலை: தூத்துக்குடி விமானம் மதுரையில் தரையிறக்கம்
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை 4.30 மணி அளவில் கிளம்பியது. மதுரை பகுதியில் வந்தபோது, மோசமான வானிலை காரணமாக மதுரையிலேயே விமானத்தைத் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 6 மணி அளவில் தரை இறங்கிய விமானத்தில் இருந்த 47 பயணிகள் பின்னர் கார்களின் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.