இடி தாக்கி வயலில் வேலை செய்த 2 பேர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.
குப்பு என்பவரின் மகன் ஐயாக்கண்ணு (50) மற்றும் அவரின் மருமகன் கோழி - வலையநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (45) இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். பிறபகல் முதல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பலத்த இடியுடன் பெய்த மழையில், இடிதாக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.