ஈரோட்டில் காதல் தம்பதி தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு வீரப்பச்சத்திரம் பகுதியில் காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு வீரப்பச்சத்திரம் பகுதியில் காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு வீரப்பச்சத்திரம் பாரதி தெருவில் 2 மாதங்களுக்கு முன்பு குடி வந்த மணிமாறன் - ரத்திகா தம்பதி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மணிமாறன் (29), கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த ரத்திகா (23) ஆகியோர் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 மாதத்துக்கு முன்பு தான் ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை இருவரும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.