கருத்து கூற நித்தியானந்தா மறுப்பு
மதுரை ஆதீன இளைய பட்டத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனகர்த்தர் அறிவித்ததைத்
மதுரை ஆதீன இளைய பட்டத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனகர்த்தர் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்கியிருக்கும் நித்தியானந்தாவிடம் கருத்து கேட்க செய்தியாளர்கள் குவிந்தனர். ஆனால், இது குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது செய்தியாளர்களைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றும், நாளை காலை சந்திப்பார் என்றும் நித்தியானந்தரின் சீடர்கள் தெரிவித்தனர்.