காரைக்காலில் மழை பாதிப்பு குறித்து போனில் தகவல் தெரிவிக்க ஏற்பாடு
காரைக்கால் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியரகத்திற்கு தகவல் தெரிவித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார்
காரைக்கால் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து ஆட்சியரகத்திற்கு தகவல் தெரிவித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மக்கள் கனமழை மற்றும் புயலால் ஏற்படும் பாதிப்பு குறித்து 24 மணி நேர சேவையான 1077 என்ற எண்ணிற்கு தரைவழி தொலைபேசியிலும்,
04368-222707 என்ற எண்ணிற்கு செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.