செவ்வாய்க்கிழமை நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. புதன்கிழமை அன்று நாகப்பட்டினத்துக்கும் நெல்லூருக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.