தேவர் ஜெயந்தி விழாவுக்குச் வந்தவர்கள் படுகொலை: சாத்தூரில் பதற்றம்
சாத்தூரில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர் கல்வீசியதால் சாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 AM
சாத்தூரில் அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர் கல்வீசியதால் சாத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சாத்தூர் வழியாகச் செல்லும் பேருந்துகள், சாத்தூர் பைபாஸ் சாலையில் மாற்றிவிடப்பட்டன. சாத்தூரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுசம்மந்தமாக சாத்தூரைச் சேர்ந்த பாண்டி, சிலம்பரசன் மற்றும் மாரிசாமி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement