சாத்தூர் அருகே காட்டில் ஆண் பிணம்: கொலை குறித்து போலீஸார் விசாரணை
சாத்தூர், செப்.1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி காட்டுப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தலையில் கற்கள் போட்டுத் தாக்கி சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:14 AM
சாத்தூர், செப்.1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி காட்டுப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று தலையில் கற்கள் போட்டுத் தாக்கி சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அருகே அவர் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படும் பை மற்றும் பேக் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சாத்தூர் டிஎஸ்பி சின்னையா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். இது கொலையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.