முகப்பு
தற்போதைய செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 4,000 கன அடி திறந்துவிடப்படுகிறது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணை இன்று....

தற்போதைய செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு

இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 4,000 கன அடி திறந்துவிடப்படுகிறது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மேட்டூர் அணை இன்று....

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சேலம், செப்., 17 : டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இன்று இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இன்று பகல் 12.20 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கேவி. ராமலிங்கம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் மதகுகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் தங்கமணி, நெடுஞ்சாலை மற்றும் சிவில் துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் எம்பி செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 4,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.

சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மேட்டூர்  அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் நீர்மின் நிலையத்தில் இருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது கூடுதல் தகவலாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →