திருப்பரங்குன்றம், செப்.20: நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று காலை 10.45 மணி அளவில், செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த மறியல் போராட்டத்தால் ரயில் 10 நிமிடங்கள் வரை நிறுத்தப் பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். இதனால் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.