75 இலங்கை அகதிகள் ஜாமினில் விடுதலை
தமிழகத்தில் உல்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து 120 பேர் அனுமதியின்றி வெளியேறி நாகை வேலாங்கன்னியிலிருந்து கடல் மார்கமாக ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றனர். சனிகிழமை அதிகாலை படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக .அவர்கள் நடுக்கடலில்
தமிழகத்தில் உல்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து 120 பேர் அனுமதியின்றி வெளியேறி நாகை வேளாங்கன்னியிலிருந்து கடல் மார்கமாக ஒரு படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்றனர். சனிகிழமை அதிகாலை படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக .அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.இதையடுத்து தமிழக கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படையினர் அகதிகளை மீட்டு கரையேற்றினர் . கரையேற்றபட்ட 120 அகதிகளில் பெண்கள், சிறுவர்கள் குழந்தைகள் தவிர 75 ஆண்கள் அடங்குவர். இவர்களை கடந்த ஞாயிற்றுகிழமை நாகை குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் முன்னிலை படுத்தபட்டனர். அப்போது 75 அகதிகளையும் ஏப்.10 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாகை குற்றவியல் நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இதன்படி 75 அகதிகளும் புழல்சிறையில அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற காவல் நிறைவு நாளான இன்று மாலை 75 அகதிகளும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு குற்றவியல் நீதிதுறை நடுவர் மன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டனர். அப்போது 75 பேரையும் நீதிபதி சரஸ்வதி தனது அதிகாரத்தின் பேரில் பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டார். ஒரிரு நாட்களில் அகதிகள் அனைவரும் தங்கள் முகாம்களுக்கு அனுப்பபடுவார்கள் எனத் தெரிகிறது.