நாகை மீனவர்கள் மேலும் 4 பேர் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக
நாகப்பட்டினம் மாவட்டம் வானவன்மகாதேவியைச் சேர்ந்த காளியப்பன், கலைமணி, ரவிசந்திரன், ரெங்கையன் ஆகிய நால்வரும் மீன் பிடிப்பதற்காக நேற்று மதியம் கடலுக்குச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற அவர்கள் மீது நேற்று இரவு இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினராம். இதனால் காயம் அடைந்த அவர்கள் 4 பேரும் இன்று மதியம் ஒரு மணி அளவில் கரைக்குத் திரும்பினர் . பின்னர் அவர்கள் நால்வரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.