முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் படுகொலை

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:15 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே மர்ம கும்பலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் இன்று காலை முன் விரோதம் காரணமாக கனி (30), குமார் (32) இருவரும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இருவரும் பத்து தினங்களுக்கு முன்னர் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளனர். இருவரும் இன்று காலை வழக்கம்போல், சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ஊருக்குத் திரும்பி வந்தனர். வரும் வழியில் மர்ம கும்பல் அரிவாளால் இவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து தப்பித்துள்ளது.  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →