முசிறி அருகே விபத்து : அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயம்
கரூர் அருகே நடந்த சிறிய விபத்தில், கடலூர் பகுதிகளில் வறட்சி நிலை குறித்து ஆராய வந்த தமிழக அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயமடைந்தார்.
கரூர் அருகே நடந்த சிறிய விபத்தில், கடலூர் பகுதிகளில் வறட்சி நிலை குறித்து ஆராய வந்த தமிழக அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் காயமடைந்தார்.
கடலூர் பகுதிகளில் நிலவும் வறட்சி நிலை குறித்து ஆராய தமிழக அமைச்சர்கள் குழு அப்பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறது.இந்த நிலையில், வறட்சி குறித்து ஆராய கடலூர் வந்திருந்த வருவாய் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் வந்த கார், முசிறி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அமைச்சர் வெங்கடாச்சலத்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.