3 தமிழர்களை ஜெயலலிதா காப்பாற்றுவார்: நெடுமாறன் நம்பிக்கை
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:-
பஞ்சாபைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 19 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு வரும் வேளையில் இந்தத் தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களை வருத்தமடையைச் செய்துள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் வழக்கை இந்தத் தீர்ப்பு பாதிக்கக்கூடும். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 3 தமிழர்களைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக கூறியுள்ளார்.