வீராணம் ஏரி மண்ணை மக்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க முதல்வருக்கு உழவர் முன்னணி கோரிக்கை
வீராணம்ஏரியை தூர்வாரும் போது, ஏரியின் வண்டல் மண்ணை அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
வீராணம்ஏரியை தூர்வாரும் போது, ஏரியின் வண்டல் மண்ணை அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியை ரூ.40 கோடி செலவில் தூர்வாரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது. அவ்வாறு தூர்வாரத் தொடங்கும் போது ஏரியில் உள்ள மண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்ல தமிழகஅரசு அனுமதி வழங்க வேண்டும் என கோருகிறோம். மண் எடுத்துச் செல்ல அனுமதித்தால் வீராணம்ஏரி விரைந்து ஆழப்படுத்தப்படும் என்பதோடு, தமிழகஅரசுக்கு பணிச்சுமையும், பணச்சுமையும் குறையும். வீராணம்ஏரி பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த முன்வந்திருக்கும் தமிழக முதல்வர் இக்கோரிக்கையையும் ஏற்று இக்கோடைக் காலத்திற்குள் ஏரியை ஆழப்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அ.கோ.சிவராமன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.