மதுரை விமான நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கத்தினர் தர்ணா
சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு இருவழி விமான சேவைக்கு மதுரை விமான நிலையத்தை
மதுரை விமான நிலையத்தில் தொழில் வர்த்தக சங்கத்தினர் இன்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு இருவழி விமான சேவைக்கு மதுரை விமான நிலையத்தை தகுதி உயர்த்த வேண்டும், மதுரை விமான நிலையத்தை சரக்குகளைக் கையாளும் வகையில் அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தொழில் வர்த்தக சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினரும் சௌராஷ்டிர சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்றன.