சிதம்பரம் அருகே ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலைகள் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள கீழநத்தம் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயிலில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்த 6 ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே கீழநத்தம் கிராமத்தில் ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் முன்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 அடி உயரமுள்ள ஸ்ரீசிவகாமசுந்தர், ஸ்ரீமுருகர், ஒன்றடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை, ஒரு அடி உயரமுள்ள மாணிக்காவாசகர், சுந்ததர் ஆகிய 6 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரிலிருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்படும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.