முகப்பு
தற்போதைய செய்திகள்

மீனவர்கள் சிறைபிடிப்பு : காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:03 PM
பகிர்:

நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் இன்று ஒரு நாள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது.

இந்த நிலையில், நேற்று நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 400 விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி உடனடியான இந்த பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →