மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தோப்புகொல்லி பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் முனுசாமி. இவர் கவரப்பேட்டை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக வேலை
தற்போதைய செய்திகள்மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தோப்புகொல்லி பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் முனுசாமி. இவர் கவரப்பேட்டை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக வேலை
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே சோம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மின்சார விபத்தில் மின்சார ஊழியர் முனுசாமி(41) பலியானார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தோப்புகொல்லி பகுதியை சேர்ந்த குப்புரெட்டி மகன் முனுசாமி. இவர் கவரப்பேட்டை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கவரப்பேட்டை அருகே பல பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்று வீசத் தொடங்கியதால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. கவரப்பேட்டை அடுத்த சோம்பட்டு அருகே தர்காஸ் கண்டிகை பகுதியில் மின் கம்பிகளை சரிசெய்யும் பணியில் முனுசாமி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.